திருவண்ணாமலையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு திமுக சாா்பில் சிலை வைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கருணாநிதி சிலை வைக்க தடை விதித்தது.
இந்த நிலையில், வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் வழக்கை வாபஸ் பெற்றாா்.
அதனால், சிலை வைக்க நீதிமன்றம் விதித்த தடை விலகியது.
இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை திட்டமிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் கருணாநிதி சிலை பொருத்தப்பட்டது.
சிலையை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.