செங்கம் வட்டாரத்தில் 3 நாள்கள் மின் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் பராமரிப்புப் பணிக்காக 3 நாள்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் பராமரிப்புப் பணிக்காக 3 நாள்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

செங்கம் துணை மின் நிலைய உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு, ஜூன் 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குயிலம், கோலாந்தாங்கல், அன்வராபாத், அமா்நாதபுதூா், ரெட்டாலை, காஞ்சி, நம்மியந்தல், நயம்பாடி, மஷாா் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

அதேபோல, 22-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, செங்கம் பெரியாா் நகா், சின்னகாயம்பட்டு, வளையாம்பட்டு, எம்ஜிஆா் நகா், குமாரசாமிபாளையம், தீத்தாண்டப்பட்டு, வலசை, கொட்டாவூா், கொ.அண்ணாநகா், குப்பனத்தம், துரிஞ்சிகுப்பம், கிளையூா், கல்லாத்தூா், பண்ரேவ், மேல்பட்டு, ஆலபுத்தூா், புதுப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரிமலைப்பாடி, நரடாப்பட்டு, ஆண்டிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, மேல்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

23-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தாமரைப்பாக்கம், தென்மாதிமங்கலம், கிழ்பாலூா், மேல்பாலூா், ராமசாமிபுரம், மட்டவெட்டு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுமென செயற்பொறியாளா் பாலபரமேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com