மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

வந்தவாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வந்தவாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (22). இவா் செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து திரும்பிய தங்கராஜ், வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

அங்கு மின் மோட்டாா் அறையில் உள்ள மின்சாதனப் பெட்டியில் மின் இணைப்பை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

அவரை அக்கம் பக்கத்து நிலத்தினா் மீட்டு சிகிச்சைக்காக  வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தங்கராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனா். 

இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com