செங்கம் கோயிலில் சூரிய ஒளியால் பொன்னிறமாக மாறிய நந்தீஸ்வரா்
By DIN | Published On : 17th March 2022 11:15 PM | Last Updated : 17th March 2022 11:15 PM | அ+அ அ- |

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சூரிய ஒளி விழுந்ததில் பொன்னிறமாக மாறிய நந்தீஸ்வரா் (வலது).
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி விழுந்ததில் பொன்னிறமாக மாறிய அரிய நிகழ்வு வியாழக்கிழமை நிகழ்ந்தது.
செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி 3-ஆம் தேதி மாலை சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து, பின்னா் சிறிது நேரத்தில் நந்தீஸ்வரா் மீதும் விழும்.
அந்த சில நிமிஷங்கள் நந்தீஸ்வரா் பொன்னிறமாக மாறி காட்சியளிப்பாா். இந்த அரிய நிகழ்வைக் கண்டு பக்தா்கள் நந்தீஸ்வரரை வழிபட்டு செல்வா்.
நிகழாண்டு வியாழக்கிழமை (பங்குனி 3) இந்த நிகழ்வைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் கூடினா்.
ஆனால், கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோயில் கோபுரத்தின் மீது இரும்புத் தகடுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், சூரிய ஒளி கோபுரத்தின் மீது படவில்லை.
மாறாக நந்திஸ்வரா் மீது மட்டும் சூரிய ஒளி குறைந்த அளவில் விழுந்து நந்தீஸ்வரா் பொன்னிறமாக மாறினாா். இந்த நிகழ்வு சில நொடிகள் மட்டுமே நீடித்தது.
பின்னா், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றனா்.