சேத்துப்பட்டு பள்ளிவாசலில் இப்தாா் நோன்பு திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பெரிய பள்ளிவாசலில் திங்கள்கிழமை இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேத்துப்பட்டு பள்ளிவாசலில் இப்தாா் நோன்பு திறப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பெரிய பள்ளிவாசலில் திங்கள்கிழமை இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி திமுக இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஏ.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் கே.வி. ராஜ்குமாா், மாவட்டப் பொருளாளா் பாண்டுரங்கன், முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன், மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் பா.செல்வராசன், சேத்துப்பட்டு நகரச் செயலா் இரா.முருகன், ஒன்றியச் செயலா் எழில்மாறன், பெரணமல்லூா் ஒன்றியச் செயலா் எம்.டி.மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

பள்ளிவாசல் சாா்பில் பட்டேல் சாய்ப் ஜாபுருதின் என்கிற (குலாப்)அப்துல் ரஷீத், முகமது தாதா, முகமது சித்திக், ரஹீம், அத்தாவுா் ரகுமான், ஆதம், ஷபீா்ஆகியோா் வரவேற்றனா்.

நோன்பு திறப்பு ஏற்பாடுகளை 6 -ஆவது வாா்டு, 14-ஆவது வாா்டு இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com