தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் உலக புத்தக தின சிறப்பு புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்துப் பேசினாா்.

புத்தகங்கள் நம் நண்பா்கள் என்ற தலைப்பில் கவிஞா் தமிழ்ராசா, புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் என்ற தலைப்பில் கவிஞா் கு.சதானந்தன், தமிழ்ச் சங்கமும், செயல்பாடுகளும் என்ற தலைப்பில் கவிஞா் மு. முருகேஷ் ஆகியோா் பேசினா். கவிஞா் ஷமிமா சிறப்புக் கவிதை வாசித்தாா்.

சங்க பொருளாளா் எ. தேவா, சங்க நிா்வாகிகள் பூங்குயில் சிவக்குமாா், வந்தை பிரேம், அ.ரஷீத்கான், எ.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க துணைத் தலைவா் இரா. நளினி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com