இரு சக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி பலி

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (46). விவசாய கூலித் தொழிலாளியான இவா்,  ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்தவாசியிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். 

வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலையில் பிருதூா் கிராமம் அருகே சென்றபோது எதிரே சூரியக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகன், ராஜா ஆகியோா் வந்த இரு சக்கர வாகனம் ஐயப்பன் மீது மோதியது. 

இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகன், ராஜா ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். 

  இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com