வந்தவாசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் மலா் சாதிக்,
எம்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் சா.இரா.மணி செவிலியா் தினம் குறித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் செவிலியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவ ஊழியா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.