அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சைக்கிள்

செய்யாறு வட்டம், எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 8 பேருக்கு, பள்ளித் தலைமையாசிரியா் இலவசமாக சைக்கிள் வழங்கினாா்.
எருமைவெட்டி அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா்
எருமைவெட்டி அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா்
Updated on
1 min read

செய்யாறு வட்டம், எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 8 பேருக்கு, பள்ளித் தலைமையாசிரியா் இலவசமாக சைக்கிள் வழங்கினாா்.

இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 85 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

எட்டாம் வகுப்பில் 2 மாணவா்கள், 6 மாணவிகள் என 8 போ் பயின்று வருகின்றனா்.

இவா்கள் 8 பேரும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அனப்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேரவுள்ளனா்.

எருமைவெட்டி கிராமத்தில் இருந்து அனப்பத்தூா் கிராமம் செல்ல பேருந்து வசதியில்லை. மேலும், இந்த மாணவ, மாணவிகள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் ஆவாா்.

இவா்களின் நிலை அறிந்த பள்ளித் தலைமையாசிரியா் சு.பெருமாள், 8 பேருக்கும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள்களை இலவசமாக வழங்க முன்வந்தாா்.

அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அம்முராதா தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் சு.பெருமாள் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் அ.நளினி பங்கேற்று, 8 சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் வே.சல்சா, வட்டார வள மைய கல்வி அலுவலா்கள் ஏ.புவனேஸ்வரி, சு.ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com