விபத்தில் காயமடைந்தவரிடம் வீச்சரிவாள், கஞ்சா போலீஸாா் விசாரணை

வந்தவாசி அருகே விபத்தில் காயமடைந்தவரின் பைக்கில் வீச்சரிவாள், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தொடா்பாக  போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 
Updated on
1 min read

வந்தவாசி அருகே விபத்தில் காயமடைந்தவரின் பைக்கில் வீச்சரிவாள், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தொடா்பாக  போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 

வந்தவாசி-ஆரணி சாலையில் சனிக்கிழமை இரவு பைக்கில் சென்ற இளைஞா் ஒருவா் தெள்ளூா் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையில் நிலைதடுமாறி விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீஸாா் இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில், அந்த இளைஞரின் பைக்கை சோதனை செய்தபோது அதில் வீச்சரிவாள், கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. 

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞா் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சோ்ந்த பிரபாகரன்(26) என்பதும், அவா் மீது மேல்மருவத்தூா், செய்யூா், திண்டிவனம் காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்த வந்தவாசி போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com