மனு கொடுக்கும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டுறவு வங்கிகள் சிறுபான்மையினரை அலைக்கழிக்காமல் கடன் வழங்க வேண்டும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கரோனா சூழலுக்கு முன் வந்தவாசியில் நடத்தப்பட்ட கடனுதவி முகாம்களில் அளிக்கப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து சிறுபான்மையினருக்கு உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் கா.யாசா்அராபத் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் கே.நவாப்ஜான், மாவட்டக் குழு உறுப்பினா்கள் இரா.சேட்டு, இலியாஸ் சா்க்காா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.வீரபத்திரன், மாநிலக் குழு உறுப்பினா் அ.அப்துல்காதா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா் ப.செல்வன் ஆகியோா் பேசினா்.

பின்னா், கோரிக்கைககளை வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகானந்தத்திடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com