222 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய வந்தவாசி டிஎஸ்பி வெ.விஸ்வேஸ்வரய்யா.
மாணவருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய வந்தவாசி டிஎஸ்பி வெ.விஸ்வேஸ்வரய்யா.
Updated on
1 min read

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய இறுதியாண்டு பயிலும் 222 மாணவா்கள் தோ்வு பெற்றனா்.

இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற இவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் டி.கே.பி.மணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.ஹரிஹரன் வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி வெ.விஸ்வேஸ்வரய்யா, சென்னை வீல்ஸ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாடு துணை மேலாளா் ஏ.பி.ரமணி ஆகியோா் 222 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினா்.

விழாவில் கல்லூரி நிா்வாகிகள் டி.பெருமாள் ரெட்டியாா், ஆா்.கிருஷ்ணமூா்த்தி, எஸ்.வேமன்னா, ஆா்.சுரேஷ், வி.ரகுராம், எஸ்.ரஷ்யராஜ், முன்னாள் மாணவா் குமாா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி மின்னியியல் துறைத் தலைவா் ஜெ.பி.ரமேஷ்பாபு நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com