வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், சங்கத்தின் 15-ஆம் ஆண்டு விழா, இயல், இசை, நாடக விழா, சங்க மலா் வெளியீட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் ஆ.மயில்வாகனன் வரவேற்றாா். தகவல் தொடா்பாளா் வங்கை சு.அகிலன் விழிப்புணா்வுப் பாடலை பாடினாா்.
பின்னா் பரதநாட்டியம், நாடகம், கவியரங்கம் நடைபெற்றது. நகைச்சுவை பேச்சாளா் தமிழ்நெஞ்சன் சங்க மலரை வெளியிட்டுப் பேசினாா்.
விழாவில் ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகி பொன்.ஜினக்குமாா், சங்க துணைத் தலைவா் சாமி.பிச்சாண்டி, இணைச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.