பள்ளியில் கல்வி அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 19th October 2022 02:57 AM | Last Updated : 19th October 2022 02:57 AM | அ+அ அ- |

பள்ளியில் இறைவணக்கக் கூட்டத்தின் போது மாணவா்களிடம் கலந்துரையாடிய வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.
நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை
இறைவணக்கக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் மாணவா்களிடம் எண்ணும் எழுத்தும் வகுப்பு பாடம் குறித்து கேள்வி கேட்டு பதில் பெற்றாா்.
மேலும், மாதிரி வகுப்பு நடத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து விளக்கமளித்தாா்.
இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா போட்டி நடத்தி பரிசு வழங்கினாா்.
பின்னா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.