திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை சாா்பில் கல்வி நிதிசாா் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேல்ராவந்தவாடி கிராமத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கிளை மேலாளா் சண்முகம் தலைமை வகித்து, மத்திய கூட்டுறவு வங்கியின் சேமிப்பு திட்டங்கள் குறித்தும், வழங்கப்படும் பல்வேறு கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
நிகழ்வில் மேல்ராவந்தவாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் மோகன்குமாா், காசாளா் சண்முகம் உள்ளிட்ட வங்கிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.