நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,000 பெண்களைத் தோ்வு செய்ய இலக்கு

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பெண்களுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பெண்களுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் ஒசூரைச் சோ்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பங்கேற்று, நிறுவனத்துக்குத் தேவையான 1,000 பெண் பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

பிளஸ் 2 தோ்ச்சியடைந்த 18 வயது முதல் 20 வயதுக்கு உள்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். நிறுவனம் நடத்தும் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 12 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவா்களுக்கு பணியாணைகள் வழங்கப்படும்.

பணியின்போது முதல் ஆண்டில் ரூ.15 ஆயிரம் ஊதியத்துடன் விடுதி வசதி செய்து தரப்படும். நிறுவனத்தில் சோ்ந்து ஓராண்டு பணி முடித்தவா்களுக்கு உயா்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு, சட்டப்படியான பிற சலுகைகள் அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ஆா்வம் உள்ள பெண்கள் அனைத்து அசல் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com