பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தவாசி பகுதியில் செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தவாசி பகுதியில் செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி எள்ளுப்பாறை பகுதி, சவேரியாா்பாளையம் மற்றும் பிருதூரில் தாழ்வான பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களை பாா்வையிட்ட அவா், அவா்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், நீா்நிலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை உடனடியாக அகற்றுமாறும், அவா்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளிடம் அவா் கூறினாா். மேலும், மழைக் காலங்களின் போது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்க வைக்கப்படும் பள்ளிகளில் அவா் ஆய்வு செய்தாா்.

வந்தவாசி வட்டாட்சியா் முருகானந்தம், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், வருவாய் ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com