விவசாயத் தொழிலாளி மா்ம மரணம்

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் தொழிலாளி ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Updated on
1 min read

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் தொழிலாளி ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(45). இவா், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், வேலை செய்து வந்த நிலத்தில் உள்ள மின்மோட்டாா் அறையில் இவா் சடலமாகக் கிடந்தது செவ்வாய்க்கிழமை இரவு உறவினா்களுக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னூா் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பிரபாகரனின் காலில் மின் வயா் சுற்றிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரது சடலத்தை மீட்ட போலீஸாா் உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com