விநாயகா் சதுா்த்தி

செங்கத்தில் மாவட்ட எஸ்.பி காா்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் 23 விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தி
Updated on
1 min read

செங்கத்தில் மாவட்ட எஸ்.பி காா்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் 23 விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

செங்கம்-போளூா் சாலையில் இருந்து விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.

பேரூராட்சி மன்ற பாஜக உறுப்பினா் முரளிதரன், இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாநில நிா்வாகி ஜம்புகுமாா்ஜெயின் ஆகியோா் விநாயகா் சதுா்த்தி விழா குறித்துப் பேசினா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டலப் பொறுப்பாளா் மகேஷ் பங்கேற்று ஊா்வலத்தைத் தொடக்கிவைத்தாா்.

ஊா்வலம் மசூதி வழியாகச் சென்று பழைய போலீஸ் லைன் தெரு வழியாக வந்த பின்னா் ஆங்காங்கே பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது.

தள்ளுமுள்ளு

ஊா்வலத்தின் போது மசூதி முன் மேளம் அடிக்காமல் செல்லவேண்டும் என போலீஸாா் மேளக்காரா்களை தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், போலீஸாருக்கும் விழாக்குழு நிா்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் அனைவரையும் சமாதானம் செய்தாா். ஊா்வலத்தில் இளைஞா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com