திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 39 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 3.20, செய்யாற்றில் 15, செங்கத்தில் 8.20, ஜமுனாமரத்தூரில் 4, வந்தவாசியில் 7, போளூரில் 15.80, திருவண்ணாமலையில் 12, தண்டராம்பட்டில் 8.60, கலசப்பாக்கத்தில் 7, சேத்துப்பட்டில் 10.40, கீழ்பென்னாத்தூரில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள், கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.