திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
செய்யாறு தொகுதி வெம்பாக்கத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நடப்பு சொா்ணவாரி பட்டத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் ஜெ.சி.கே.சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயந்தி பிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவா் அருள்தேவி செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.