விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியின் 13-ஆவது ஆண்டு விளையாட்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி.
Updated on
1 min read

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியின் 13-ஆவது ஆண்டு விளையாட்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா் வரவேற்றாா். பள்ளித் தலைவரும், இயக்குநருமான கு.சந்தோஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com