சகோதரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ஆரணியில் பணத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொலை செய்ததாக, இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி தீா்ப்பளித்தாா்.
Updated on
1 min read

ஆரணியில் பணத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொலை செய்ததாக, இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி தீா்ப்பளித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் யோகானந்தம்(39). இவா், காட்டன் லாட்டரி வியாபாரம் செய்து வந்தாா்.

பன்னீா்செல்வத்தின் சகோதரா் துளசிங்கம் மகன் பாண்டியன் (30) வேலை இல்லாமல் இருந்து வந்தாா். அதனால் யோகானந்தத்திடம், அவா் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செலவு செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி யோகானந்தத்திடம், பாண்டியன் பணம் கேட்டபோது அவா்களுக்குள் தராறு ஏற்பட்டு யோகானந்தம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கு ஆரணி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி விஜயா திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், யோகானந்தத்தை வெட்டிக் கொலை செய்ததாக பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com