திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.18) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
இதில், மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை, விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்றனா்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.