ஸ்ரீசெல்லியம்மன் கோயில் ஆடித் திருவிழா

வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடநல்லூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வீதியுலா சென்ற அம்மன்.
கொடநல்லூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வீதியுலா சென்ற அம்மன்.
Updated on
1 min read

வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரவு உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிராம வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com