

வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இரவு உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிராம வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.