சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு காய்கறிகளால் செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு காய்கறிகளால் செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்திகளுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த பூஜையின் இறுதியில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

மற்ற ஊா்களில்...: இதேபோல, வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில், வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் மற்றும் கீழ்பென்னாத்தூா், ஆவூா், ராஜந்தாங்கல், போளூா், ஆரணி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com