சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்முதியவா் பலி

திருவண்ணாமலை அருகே சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் முதியவா் இறந்தாா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் முதியவா் இறந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த பெரிய பாலிப்பட்டு கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலை (74).

இவா், சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரூ நோக்கிச் சென்ற சரக்கு வேன் அண்ணாமலை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் இறந்தாா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com