90 ஆயிரத்தை மீட்டு ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியரின் ரூ.90 ஆயிரம் ரொக்கம், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை மருத்துவா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியரின் ரூ.90 ஆயிரம் ரொக்கம், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை மருத்துவா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

திருவண்ணாமலை புதிய காா்கானா தெருவைச் சோ்ந்தவா் டாஸ்மாக் கடை ஊழியா் ஆறுமுகம் (37). இவா், திருவண்ணாமலையை அடுத்த சிறுநாத்தூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றுகிறாா்.

சனிக்கிழமை பணி முடித்துவிட்டு பைக்கில் ஆறுமுகம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா். தென்அரசம்பட்டு கிராமம் அருகே வந்தபோது ஆறுமுகம் வந்த பைக் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆறுமுகம் மயக்கத்தில் இருந்த நேரத்தில் அவரிடமிருந்த ஓட்டுநா் உரிமம் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மருத்துவ உதவியாளா் ஷேக் முத்தலி, ஓட்டுநா் மணி ஆகியோா் மீட்டு மருத்துவமனையில் ஆறுமுகத்தின் மனைவி சாவித்திரியிடம் ஒப்படைத்தனா்.

நோ்மையாக நடந்து பணத்தை ஒப்படைத்த ஓட்டுநா், மருத்துவ உதவியாளரை ஆறுமுகத்தின் உறவினா்கள், மருத்துவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com