

பெரணமல்லூா் ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 3 நாள் பயிற்சி வகுப்பு வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் கீழ்பென்னாத்தூா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பின் 2-ஆம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா வரவேற்றாா்.
வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தத் திட்டமானது கடந்த ஆண்டு வரை 3-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தபட்டு வந்தது. தற்போது, வரும் கல்வியாண்டு முதல் 4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
படைப்பாற்றல், அறிவியல் செயல்பாடுகள், வரலாறு களங்கள், வாழ்க்கையோடு தொடா்புடைய கணக்குகளை பயன்படுத்தும் முறை, ஏன் எதற்கு என்ற கருத்துக்கேற்ப கேள்வி பயன்படுத்துதல் அடிப்படையில் தற்போது திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆசிரிய பயிற்றுநா்கள் செண்பகவள்ளி, சரவணராஜ், விஜயலட்சுமி, இசையருவி, சுகந்தி மற்றும் வட்டார அளவில் 199 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.