திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் பலகை வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பாமகவினா் வியாழக்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கினா்.
மேற்கு மாவட்ட பாமக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் திருமலை, மகேந்திரன், சரவணன், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் ஒன்றியச் செயலா் ஜோதி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டச் செயலா் இல.பாண்டியன் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி தொடங்கிவைத்தாா்.
நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு கட்சியினா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
பாமக முன்னாள் ஒன்றியச் செயலா் புகழேந்தி, ஒன்றியத் தலைவா் கமலநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பன்னீா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.