12 பழங்குடியினருக்கு வீடு கட்ட ஆணை

சேத்துப்பட்டில் நீண்ட காலமாக குடியிருக்கும் 12 பழங்குடியினருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் வியாழக்கிழமை வழங்கினாா்.
12 பழங்குடியினருக்கு வீடு கட்ட ஆணை
Updated on
1 min read

சேத்துப்பட்டில் நீண்ட காலமாக குடியிருக்கும் 12 பழங்குடியினருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கண்ணனூா் அம்பேத்கா் நகரில் 12 பழங்குடியின சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்கள், தங்களுக்கு இலவசமாக வீடு வழங்குமாறு மனு கொடுத்து பல ஆண்டுகளாக காத்திருந்தனா்.

தற்போதைய திமுக ஆட்சியில் மனு மீது அரசு நடவடிக்கை எடுத்து பழங்குடியினா் நல திட்ட அலுவலா் செந்தில்குமாா் பயனாளிகளை நேரில் அழைத்து வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா் (படம்).

பழங்குடி மக்கள் ஒருங்கிணைப்பாளா் பழனி, மாவட்ட துணைத் தலைவா் அய்யனாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com