பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை : 3 போ் கைது

செய்யாறு அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் 3 பேரை தூசி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

செய்யாறு அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் 3 பேரை தூசி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் 27 வயது பெண் . இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் தனியாா் விடுதியில் தங்கி, செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் இவா், சனிக்கிழமை (மே 20) மாலை வேலைமுடிந்து, தனது நண்பா் பாபு என்பவருடன் பைக்கில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

சித்தாத்தூா் கிராமம் வழியாகச் சென்றபோது நமண்டி ஏரிக்கரை அருகே பைக்கில் வந்த மூன்று போ், பாபு ஓட்டி வந்த பைக்கை மடக்கி அவரை தாக்கி கட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்தனராம். இந் நிலையில், பெண் தொழிலாளியை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. அவா்களிடம் இருந்து அவா் தப்பினாா்.

இது குறித்து, தூசி போலீஸில் இளம்பெண் புகாா் செய்தாா். அதன் பேரில் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து திருவடிராயபுரத்தைச் சோ்ந்த சந்திரசேகா்(28), ரஞ்சித்குமாா் (27), விக்னேஷ்(21) ஆகிய 3 பேரை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com