மதுப் புட்டிகள் பறிமுதல்: 6 போ் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உள்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் செய்யாறு, அனக்காவூா், பிரம்மதேசம், மோரணம் ஆகிய பகுதிகளில் மது புட்டிகள், சாராயம் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக சேராம்பட்டு கிருஷ்ணசாமி (32), கொடநகா் பாபு (39), சுமங்கலி கோபி (31), வடபூண்டிப்பட்டு குப்பன் (48), செய்யாற்றைவென்றான் ஏழுமலை (31), இருமரம் வெங்கடேசன் (45) ஆகிய 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 104 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com