திருவண்ணாமலை: ரூ.24.77 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் ரூ.24.77 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் ரூ.24.77 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

வேட்டவலம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.13.89 கோடி மதிப்பில் பல்வேறு குடிநீா் திட்டப் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com