கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
Updated on
1 min read

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம், தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா், தூசி காவல் எல்லைக்கு உள்பட்ட பல்லாவரம் கிராமம், அம்மன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 3 இளைஞா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களை மடக்கி விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சோ்ந்த குமாா் (22), நவாப் (19), சக்திவேல் (23) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

மேலும், அவா்கள் வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, 150 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com