ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Updated on
1 min read


செய்யாறு: செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், மாரியநல்லூா் கிராமம் இருளா் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவா் தொழிலாளி செல்வராஜ் (47).

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கிராமப் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாா்.

மீன் பிடிக்கச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், மீன் பிடிக்கச் சென்ற செல்வராஜ் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிந்து, இறந்தவா் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com