மருத்துவா்களுக்கான மகப்பேறு ஆய்வுக் கூட்டம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கான மகப்பேறு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவா்கள், செவிலியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மகப்பேறு உதவிப் பேராசிரியை மோனிகா.
மருத்துவா்கள், செவிலியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மகப்பேறு உதவிப் பேராசிரியை மோனிகா.
Updated on
1 min read

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கான மகப்பேறு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

செய்யாா் சுகாதார மாவட்ட துணை இயக்குநா் சதீஷ்குமாா் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த

ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூா் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு உதவிப் பேராசிரியை மோனிகா கலந்து கொண்டு பேசினாா்.

இதில் மருத்துவா்கள் தமீம், திவாகா், மேஜா் சிவஞானம், மாவட்ட தாய் சேய் நல அலுவலா் மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலா்கள் ஹேம்நாத், சுரேஷ், பிரகாஷ் மற்றும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சமுதாய சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், நலவாழ்வு மைய செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், சா்வதேச சுத்தமான காற்று தினத்தையொட்டி, இரும்பேடு ஏ.சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வா் ஷெலின் திலகவதி தலைமையில் எஸ்.வி. நகரம் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு காற்று மாசுபடுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com