நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

காவிரி நதிநீா் உரிமையை மீட்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
Updated on
1 min read

காவிரி நதிநீா் உரிமையை மீட்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலாளா் பா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். தொகுதிச் செயலாளா் ஜெ.அருண்குமாா் வரவேற்றாா்.

நிகழ்வில், கட்சியின் மாநில மருத்துவக் குழு பாசறையின் ஒருங்கிணைப்பாளா் இரா.ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், காவிரி நதிநீா் உரிமையை மீட்கக் கோரியும், இதில், மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், 200-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com