திருவண்ணாமலை
தீ தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திங்கள்கிழமை தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திங்கள்கிழமை தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, செங்கம் தீயணைப்பு நிலையம் சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் முரளி தலைமை வகித்தாா். செங்கம் காவல் உதவி ஆய்வாளா் யேசுராஜ் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் பங்கேற்ற செங்கம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீ தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.