சாலை விபத்தில் இளைஞா் பலி

போளூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டு பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.

போளூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டு பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.

போளூா் சாவடித் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் விஜயகுமாா் (23). போளூா் - ஜமுனாமரத்தூா் சாலையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவா், ஜமுனாமரத்தூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டாா்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில், விஜயகுமாா் பேருந்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போளூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாணை மேற்கொண்டு, விஜயகுமாரின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com