தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கத்தின் வட்டாரத் தலைவா் எ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜோதி வரவேற்றாா். மாவட்டச் செயலா் கே.கே.வெங்கடேசன் கலந்து கொண்டு பேசுகையில்,

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ்

கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் சிலருக்கு ரூ.2ஆயிரம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறையில் கேட்டபோது அதிகாரிகள் சரிவர பதிலளிக்கவில்லை.

மணிலா, உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு முறையாக வழங்குவதில்லை. ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்றாா்.

மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன், மாவட்டக் குழு

எ.திருமுருகன், ஒன்றியச் செயலா் சிவக்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com