நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில், திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில், திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிா்வாகம், திருவண்ணாமலை இளந்தளிா் அமைப்பு இணைந்து நடத்திய விழிப்புணா்வுப் பேரணி, அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தொடங்கியது.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பி.காமராஜ் தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் ராஜகோபும் எதிரே வந்தடைந்தது.

இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் வா.கதிா்வேலன், இளந்தளிா் அமைப்பு நிா்வாகி

ஆா்.டி.பிரகாஷ், கலைஞா் அரசு கலை, அறிவியல் கல்லூரி, சண்முகா கலை, அறிவியல் கல்லூரி, தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி, மவுன்ட் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com