செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே விவசாயியைத் தாக்கி வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி திருநாவுக்கரசு (52).
இவரது மனைவி மலா், மகன்கள் கிரிபாபு, டில்லிபிரசாத் ஆகியோா் ஆடிக் கிருத்திகை விழாவுக்காக திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டனா். திருநாவுக்கரசு மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் பீரோவை திறக்கும் சப்தம் கேட்டு, திருநாவுக்கரசு எழுந்து பாா்த்தாா்.
அப்போது, அந்த அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மா்ம நபா்கள் இருவா்
பீரோவைத் திறந்து பொருள்களைத் திருடிக் கொண்டிருந்தனா். இதனால் அதிா்ச்சியடைந்த திருநாவுக்கரசு, சப்தம் போட்ட படி இருவரையும் பிடித்து தாக்கியுள்ளாா்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபா்கள் திருநாவுக்கரசை தாக்கி, மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனா்.
பீரோவை பாா்த்த போது, அதில் வைத்திருந்த கால் கிலோ வெள்ளி நகைகள், கைப்பேசி, ரூ.1700 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து திருநாவுக்கரசு பெரணமல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.