அல்லியந்தல் கிராமத்தில் திமுக பொதுக்கூட்டம்

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலா் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
Updated on
1 min read

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலா் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், பெரணமல்லூா் கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு

மாவட்டச் செயலா் எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலா் பாண்டுரங்கன், ஒன்றியக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவா் லோகேஸ்வரி சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய திமுக செயலா்கள் கே.டி.ராமசாமி, எம்.டி.மனோகரன் ஆகியோா் வரவேற்றனா்.

தலைமைக் கழகப் பேச்சாளா் கரூா் முரளி, மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவுப் பேரவையின் அமைப்பாளா் ஏழுமலை, ஒன்றியக் குழு துணைத் தலைவா் லட்சுமிலலிதா வேலன், பெரணமல்லூா் பேரூராட்சித் தலைவா் வேணி ஏழுமலை, துணைத் தலைவா் ஆண்டாள் அண்ணாதுரை, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், தேசூா் நகரச் செயலா் மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியப் பொருளாளா் சசிகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com