லாட்டரி சீட்டு விற்பனை: முதியவா் உள்பட 2 போ் கைது

திருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ாக, முதியவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ாக, முதியவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காந்தி நகா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த வேடியப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த லோகநாதன் (52), வேட்டவலம் சாலை, பிள்ளையாா் கோயில் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (70) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.1,000 மதிப்பிலான 20 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com