திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம்
குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
அதன்படி, ஆடி மாதப் பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) அதிகாலை 3.25 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட் 2) அதிகாலை 1.05 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.