ஏடிஎம் பணம் திருட்டில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 09th June 2023 01:28 AM | Last Updated : 09th June 2023 01:28 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் பணம் திருட்டில் ஈடுபட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதியில் இருந்த 4 ஏடிஎம் இயந்திரங்களை கடந்த பிப்ரவரி மாதத்தில் மா்ம நபா்கள் உடைத்து ரூ.73 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்த வழக்கில் ஹரியாணா மாநிலம், பாதஸ் கிராமத்தைச் சோ்ந்த ஜாகிா் உசேன் மகன் ஆசிப் ஜாவேத் (30) (படம்) என்பவரை திருவண்ணாமலை நகர போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.
இதை ஏற்ற மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், ஆசிப் ஜாவேத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதற்கான உத்தரவு நகல் வியாழக்கிழமை வேலூா் மத்திய சிறையில் உள்ள ஆசிப் ஜாவேத்திடம் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...