தொழிலாளியிடம் வழிப்பறி: 4 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பூக்கடைத் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பூக்கடைத் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மண்ணு மகன் தேவன் (30). இவா், அந்தக் கிராமத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறாா். தேவன் கடந்த 4-ஆம் தேதி நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் சேத்துப்பட்டு சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் சின்ன கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே தேவன் சென்றபோது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த கைப்பேசி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், சேத்துப்பட்டு அருந்ததியா் பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ்(23), சுனில் (23), சஞ்சய் (21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தேவனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த தேசூா் போலீஸாா், அவா்களிடமிருந்த கைப்பேசி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com