ஆரணி அருகே மரக்கன்றுகள் நடும் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆரணி அருகே வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆரணி அருகே வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் நெடுஞ்சாலைத் துறை மூலம்

அரியப்பாடி கூட்டுச் சாலை அருகே உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளா் நெடுஞ்செழியன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வருவாய்க் கோட்டாட்சியா் எம். தனலட்சுமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

வட்டாட்சியா் ரா.மஞ்சுளா, வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதேவி, சாலை ஆய்வாளா் இந்துமதி, கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com