கஞ்சா விற்பனை: 2 போ் கைது
By DIN | Published On : 12th May 2023 02:16 AM | Last Updated : 12th May 2023 02:16 AM | அ+அ அ- |

போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சி அருகே கஞ்சா விற்ாக 2 பேரை மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து, அமலக்காப் பிரிவு மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ்ராஜ் அறிவுரையின் பேரில், போளூா் மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் ஆய்வாளா் கே.புனிதா தலைமையிலான போலீஸாா், போளூரை அடுத்த வெள்ளூா் ஊராட்சி அருகே புதன்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வெள்ளூா் ஏரிக்கரை புதா்மறைவில் அதே கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அஜீத்குமாா்(23), ஆரணி வட்டம், நடுக்குப்பம் விநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் மணிகண்டன் (19) ஆகிய இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.